மூத்த அதிகாரிகள் பலர் ஒன்றாக பதவி உயர்வுபெறும் முதலாவது சந்தர்ப்பம்!

இராணுவத்தின் அதிகாரிகள் 63 பேருக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிகபடுகின்றது.


அந்தவகையில் நான்கு பிரிகேடியர் தர அதிகாரிகள் மேஜர் ஜெனரல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

டபிள்யூ.எஸ்.ராஜகருணா, எல்.பி.எஸ்.திலகரத்ன, ஜே.ஆர்.ஆர்.கே.சேனரத்ன மற்றும் ஏ.ஜி.எஸ்.என்.ஜெயசுந்தர ஆகியோரே இவ்வாறு மேஜர் ஜெனரல்களாக பதவி உயர்த்தப்பட்டுள்ளனர்.

அத்துடன் 25 பேர் பிரிகேடியராகவும், 34 பேர் லெப்டினன்ட் கேணல்களாகவும் பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

இராணுவத்தளபதியின் பரிந்துரையின்படி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவர்களுக்கான பதவி உயர்வுகள் வழங்கப்பட்டுள்ளன.

இதேவேளை இலங்கை இராணுவ வரலாற்றில் ஒரே சந்தர்ப்பத்தில் பெரும் எண்ணிக்கையான மூத்த அதிகாரிகள் பதவி உயர்வுபெறும் முதலாவது சந்தர்ப்பம் இதுவென கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.