கொழும்பு போர்ட் சிட்டியில் முதலீடு செய்ய சந்தர்ப்பம்!!

கொழும்பு துறைமுக நகரத்தில் (போர்ட் சிட்டி) முதலீடு செய்வதற்காக தகுதி வாய்ந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.


இந்த நிலையில், இந்த திட்டத்தில் முதலீடு செய்பவர்களுக்கான சட்ட திட்டங்கள் குறித்த விபரங்கள் வெளியிடப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் முனைப்புடன் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிராந்தியத்தில் முக்கிய முதலீட்டு தன்மையை கொண்டதாக இருக்கும் என பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அதேவேளை, கொழும்பு துறைமுக நகரத்தின் பெரும்பான்மையான உட்கட்டமைப்பு பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.

இந்த திட்டத்தில் முதலீடு ஆரம்பிக்கப்பட்ட உடனேயே பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த திட்டம் காரணமாக அடுத்த ஆண்டில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி 6 சதவீதத்தால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.