மின்னொழுக்கால் தீப்பற்றியது வவு.வடக்கு உதவிப் பிரதேசசெயலரின் வீடு!!

வவுனியா பண்டாரிக்குளம் பாடசாலை வீதியிலுள்ள வவுனியா வடக்கு உதவி பிரதேச செயலாளர் தர்மேந்திரா அவர்களின் வீடு இன்று (16) மாலை 4.30 மணியளவில் தீப்பற்றியேறிந்ததில் பல லட்சம் பெறுமதியான உடமைகள் சேதமாகியுள்ளன.


குறித்த வீடு பூட்டியிருந்த நிலையில் வீட்டின் மேல் பகுதியிலிருந்து புகை வந்ததினை அவதானித்த அயலவர்கள் வீட்டின் வளவினுள் சென்று பார்வையிட்ட சமயத்தில் வீட்டின் ஒரு பகுதி தீபற்றி எரிந்துள்ளது.

இதனையடுத்து அயலவர்கள் உடனடியாக நகரசபை தீயணைப்பு பிரிவினருக்கு தகவலை வழங்கியதுடன் தண்ணீர் ஊற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டனர்.

தீயணைப்பு பிரிவினர் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே அயவர்கள் தண்ணீர் ஊற்றி தீயினை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இவ் தீ விபத்து காரணமாக வீட்டின் ஓர் பகுதி முற்றாக சேதமடைந்துள்ளதுடன் தளபாடம் உட்பட பல பொருட்கள் முற்றாக தீயில் எரிந்து நாசமாயியுள்ளது.

மின் ஒழுக்கின் காரணமாக இவ் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அயலவர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.