மக்களின் எதிர்ப்பால் திரும்பி சென்றது யாழில் 5ஜி கோபுரம்!

யாழில் தாராளமாக 5ஜி கோபுரம் அமைக்கப்பட்டு வரும் நிலையில், தமது பகுதியில் நிறுவ கொண்டு வரப்பட்ட கோபுரத்தை குருநகர் மக்கள் ஒன்றுகூடி திருப்பி அனுப்பிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.


இன்றையதினம் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் மின்னல் வேகத்தில் 5 ஜி அலைக்கற்றை கோபுரங்கள் நிறுவப்பட்டு வருகிறது.

குறித்த தொலைத்தொடர்பு கோபுரங்கள் கொழும்பிலிருந்து கொண்டு வரப்பட்டிருந்தன.

இதையடுத்து அந்த பகுதியில் ஒன்றுகூடிய மக்கள் அதற்கு தமது கடுமையான எதிர்ப்பை வெளியிட்டனர்.

பொதுமக்களின் எதிர்ப்பையடுத்து, கோபுரங்களுடன் தொலைபேசி நிறுவன ஊழியர்கள் திரும்பிச் சென்றுள்ளனர்.

இதேவேளை 5 ஜி அலைக்கற்றை விடயமானது யாழ் மாநகரசபை உள்ளிட்ட பல்வேறு உள்ளூராட்சி மன்றங்களில் பெரும் சர்ச்சைக்குரிய விடயமாக தொடர்ந்து நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.