இன்று சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம்!

சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் இன்று(புதன்கிழமை) அனுஷ்டிக்கப்படுகின்றது.


ஐக்கிய நாடுகள் சபையின் 2000ஆம் ஆண்டு சர்வதேச புலம் பெயர்ந்தோர் தினம் பிரகடனப்படுத்தப்பட்டு அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

ஐக்கிய நாடுகள் சபையானது, புலம்பெயர்வோருக்கான தினத்தை பிரகடனப்படுத்துவதற்கு முன்னரே அவர்களுக்கான சமவாயத்தை 1990ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் திகதி பிரகடனப்படுத்தியது விசேட அம்சமாகும்.

இந்த சர்வதேச சமவாயத்தில் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக அரச மற்றும் அரச சார்பற்ற அமைப்புகளின் கடமைகள் மற்றும் பொறுப்புக்கள், அத்துடன் புலம்பெயர் தொழிலாளர் மற்றும் அவர்களின் குடும்ப அங்கத்தவர்களுக்கான உரிமைகள் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இலங்கை அரசாங்கமானது, 1996ஆம் ஆண்டு குறித்த சமவாயத்தில் கையொப்பமிட்டுள்ளது.

உலக கணக்கெடுப்பில் 258 மில்லியன் புலம்பெயர்தவர்கள் காணப்படுவதாகவும், 167 மில்லியன் பேர் அதில் புலம்பெயர் தொழிலாளர்களாக காணப்படுகின்றது.

அத்துடன், இலங்கையில் 17 இலட்சம் பேர் புலம்பெயர் தொழிலாளர்களாக காணப்படுகின்றனர் என சர்வதேச தொழிலாளர் ஸ்தாபன அதிகாரி அஸ்மி முஸ்தபா தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.