கல்முனையில் திடீர் சுற்றிவளைப்பு!!

கல்முனை பிராந்தியத்தில் இன்று அதிகாலை முதல் மதியம் வரை அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸார் திடீர் சோதனை நடவடிக்கையை முன்னெடுத்தனர்.


இந்த திடீர் சோதனை நடவடிக்கையானது கல்முனை நகரப்பகுதி நற்பிட்டிமுனை பிரதான சந்தி இதாளவட்டுவான் சந்தி , பாண்டிருப்பு போன்ற இடங்களில் மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது அதிவேகமாகச் செல்வது தொடர்பில் கண்காணிக்கப்பட்டுத் தண்டப்பணம் விதிக்கப்பட்டது.

இச்சோதனை நடவடிக்கையானது அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எச்.மாரப்பன வழிகாட்டலில் இடம்பெற்றது.

அத்துடன் இதன் போது விழிப்பூட்டல் செயற்பாடுகள் அம்பாறை மாவட்ட விசேட போக்குவரத்து பொலிஸாருடன் இணைந்து கல்முனை பொலிஸ் நிலைய போக்குவரத்து பொலிஸார் முக்கிய சந்திகள் பிரதான வீதிகளில் திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.