அவதியான நிலையில் ஏஜியன் தீவுகளில் உள்ள அகதிகள்!!

ஏஜியன் தீவுகளில் உள்ள அகதிகள் முகாம்களின் ஈரமான கூடாரத்தில் கர்ப்பிணிப் பெண்கள் வசிக்கின்றனர் என்று மெடிசின்ஸ் சான்ஸ் ஃபுரொன்டியர்ஸின் சுகாதார அவசரநிலைப் பிரிவு எச்சரித்துள்ளது.


போரினால் பாதிக்கப்பட்ட நாடுகளிலிருந்து இடம்பெயர்ந்தவர்களின் வருகை அதிகரித்துள்ள நிலையில் குறித்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உலகளாவிய அகதிகள் மன்றத்திற்காக உலகம் முழுவதிலுமுள்ள அமைச்சர்கள் ஜெனீவாவில் முதன்முதலாகச் சந்திப்பதால் இந்த விடயம் தெரியவந்துள்ளது.

கிரேக்கத் தீவான லெஸ்போஸில் (Lesbos) கிட்டத்தட்ட 18,000 பேர் நெரிசல் மிக்க ஒரு முகாமில் சிக்கியுள்ளனர். இந்த முகாமானது முதலில் சுமார் 2000 பேருக்காகவே கட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

கர்ப்பிணிப் பெண்கள், புதிய தாய்மார்கள் மற்றும் அவர்களின் குழந்தைகள் ஆகியோர் முகாமில் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாக உள்ளனர்.

8 மாதக் கர்ப்பிணியாக இருக்கும் சைனாப் (Zainab) என்ற பெண் கூறுகையில்; உலகளாவிய சுகாதார அமைப்பின் பிரதிநிதி ரியூலிப் மசும்தாருடன் தமது நிலை குறித்துத் தெரிவித்ததாகக் கூறினார்.

நன்றி bbc.co.uk
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.