நாளை சம்பந்தன் இந்தியா பயணம்!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் நாளை இந்தியா புறப்பட்டுச் செல்லவுள்ளார்.


தனிப்பட்ட காரணங்களுக்காக அவர் இந்தியா செல்லவுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.

கடந்த காலங்களிலும் மருத்துவ சிகிச்சைக்காக இரா.சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றிருந்தார். இம்முறையும் அவர் மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கத்தில் இந்திய பயணத்தை மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

வழைமையாக அவர் தனிப்பட்ட நோக்கங்களுக்காக இந்திய விஜயங்களை மேற்கொள்கின்ற காலங்களில் எல்லாம் புதுடில்லியின் முக்கிய அதிகாரிகள், பிரமுகர்களை அவர் சந்திப்பது வழமை. ஆகவே இம்முறையும் அவ்வாறு முக்கிய சந்திப்புகள் இடம்பெறலாம் என கூறப்படுகின்றது.

அதுமட்டும் அல்லாது இந்திய பிரதமர் நரேந்திர மோடியை அவர் சந்தித்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க தயாராக உள்ளதாக கடந்த காலங்களில் இருந்தே கூறிவருகின்ற நிலையில் இந்த பயணம் அதற்கான ஆயத்தங்களை ஏற்பாடு செய்யும் சூழ்நிலையை உருவாக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்தச் சூழலிலேயே சம்பந்தன் இந்தியாவுக்குப் பயணமாகின்றார். அவர் எதிர்வரும் 30 ஆம் திகதியே நாடு திரும்புவார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.