ஜனாதிபதியிடம் சென்றது ஈஸ்டர் தாக்குதல் குறித்த விசாரணை அறிக்கை!!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் இடைக்கால அறிக்கை ஜனாதிபதியிடம் கையளிக்கப்படவுள்ளது.


அதற்கமைய குறித்த அறிக்கை ஆணைக்குழுவின் உறுப்பினர்களினால் இன்று (வியாழக்கிழமை) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளிக்கப்படவுள்ளது.

ஈஸ்டர் தாக்குதல்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிப்பதற்காக முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த செப்டம்பர் மாதம் 22 ஆம் திகதி இந்த ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டது.

கடந்த 3 மாத காலப்பகுதியில் 30 பேரிடம் குறித்த ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது.

இந்த சாட்சி பதிவுகளை உள்ளடக்கி குறித்த இடைக்கால அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாக தாக்குதல் குறித்து விசாரணை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஈஸ்டர் தாக்குதல்கள் குறித்து 65 பொதுமக்களின் முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாகவும் ஆணைக்குழுத் தகவல்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.