மடியும் மலரும்..!!
மழையெந்தன் மேனியை வருடிடும் போது துணையுந்தன் மடிமீது சாய வேண்டும்
பதினாறும் பெற்றுநீ பல்லாண்டு வாழென சுகஞ்யாவும் நான் பெற வேண்டும்
துயரென்னை வாட்டிடும் போதிலும்
துணையுன்னில் வலம் வர வேண்டும்
படை நூறு வந்திட்ட போதிலும்- பாசமே கவசமாய் அமைந்திடல் வேண்டும்
இடிமின்னல் போலென இதயங்கள் ஆகையில் அன்பென துஞ்சிட வேண்டும்
பல நூறுகதை தனை நீ சொல்லும் போதினில் வாதைகள் அகன்றிட வேண்டும்
குழந்தையை வரமென நீ தரு கையில்
குழந்தையாய் மடி தூங்கவேண்டும்
ஆயிரம் சுகங்களை வென்றிடும் பொழுதுகள்
உன்னிடம் பாடிட வேண்டும்
ஆழ்கடல் போலொரு அன்பைநீ தருகையில்
படகென மிதந்திட வேண்டும்
அடிமை உடைத்திட தினமுன்னில் கொடியாகப் படர்ந்திடல் வேண்டும்
ஏழெழு சென்மங்கள் எடுத்திட்ட போதுமுன் மடிமீது உயிர்விட வேண்டும்
-த.செல்வா
02.12.2019
பதினாறும் பெற்றுநீ பல்லாண்டு வாழென சுகஞ்யாவும் நான் பெற வேண்டும்
துயரென்னை வாட்டிடும் போதிலும்
துணையுன்னில் வலம் வர வேண்டும்
படை நூறு வந்திட்ட போதிலும்- பாசமே கவசமாய் அமைந்திடல் வேண்டும்
இடிமின்னல் போலென இதயங்கள் ஆகையில் அன்பென துஞ்சிட வேண்டும்
பல நூறுகதை தனை நீ சொல்லும் போதினில் வாதைகள் அகன்றிட வேண்டும்
குழந்தையை வரமென நீ தரு கையில்
குழந்தையாய் மடி தூங்கவேண்டும்
ஆயிரம் சுகங்களை வென்றிடும் பொழுதுகள்
உன்னிடம் பாடிட வேண்டும்
ஆழ்கடல் போலொரு அன்பைநீ தருகையில்
படகென மிதந்திட வேண்டும்
அடிமை உடைத்திட தினமுன்னில் கொடியாகப் படர்ந்திடல் வேண்டும்
ஏழெழு சென்மங்கள் எடுத்திட்ட போதுமுன் மடிமீது உயிர்விட வேண்டும்
-த.செல்வா
02.12.2019
கருத்துகள் இல்லை