ஏன் எதற்காக? இந்த மரணம்.!

என் கல்வி நிலையத்தில் முதல் முதலாய் 3A என்று என்னைப் பெருமை பேச வைத்தவளே..!


உன் ஊருக்கே முதல் 3A என்று சொல்லும் போதெல்லாம் கண் சிமிட்டிச் சிரித்தவளே..!

விஞ்ஞானப் பாடம் விளங்கவில்லை ஆர்ட்ஸ் படிக்கிறேன் அக்காவைப் போல என்னையும் கம்பஸ் அனுப்புங்க சேர் என்றாயே...!

காலியிலே டெஸ்ட் மட்ச் பார்க்க நான் சென்றபோது சேர் ரீவில வருவார் என்று முழு மட்ச்சும் பார்த்தவளே..!

என்ன நடந்தது உனக்கு? என் விழிகளை மூடித் திறக்கிறேன் உன் இலக்கணச் சந்தேகங்கள் கண் முன்னே வந்து போகிறது...

நான் கம்பஸ் தானே அனுப்பினேன்
பின்பு எங்கே சென்றாய்?

என்ன ஆறுதல் சொல்வேன் உன் தாய்க்கும் குடும்பத்திற்கும்..

யதுர்ஷனா மகேந்திரன்
2017 கிளி புனித திரேஷா பெண்கள் கல்லூரி
யாழ் பல்கலைக்கழக மாணவி

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.