‘அம்மா எங்கே’ என கதறும் சிறுமி- சிரியாவில் சோகம்!!
சிரியாவில் வடமேற்குப் பகுதியில் விமானத் தாக்குதல்களுக்கு மத்தியில் சிறுமியொருவர் காப்பாற்றப்படுவதை காண்பிக்கும் காணொளியொன்று வெளியாகியுள்ளது.
விமானதாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வீட்டின் கீழ் சிக்கி இரும்புதுண்டொன்றை பிடித்தபடி உயிர் பிழைப்பதற்கு சிறுமி முயல்வதை குறித்த காணொளி காண்பிக்கிறது.
சிரியாவின் வெள்ளை தலைக்கவச மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் சிறுமியை காப்பாற்ற முயல்கின்றார்.
‘எனது அம்மா எங்கே’ என அழுதபடி சிறுமி கேட்பதையும் அவர் அங்கேயிருக்கின்றார் என மனிதாபிமான பணியாளர் தெரிவிப்பதையும் காணமுடிகின்றது.
எனினும் அடுத்தடுத்து இடம்பெற்ற விமானதாக்குதலில் அந்த சிறுமியின் தாயார் உயிரிழந்துவிட்டார் என மனிதாபிமான பணியாளர் ஒருவர் சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பகுதியொன்றை தாக்கிவிட்டு செல்லும் விமானம் மீண்டும் அந்த இலக்கை தாக்கும் நடைமுறை சிரியாவில் உள்ளது. இதன்போதே சிறுமியின் தாயார் கொல்லப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று மற்றும் ஒன்பது வயதான இரு பிள்ளைகளும் உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முதல் தாக்குதலைத் தொடர்ந்து இரண்டாவது தாக்குதல் இடம்பெற்ற வேளையும் அந்தச் சிறுமி இடிபாடுகளுக்குள் சிக்குண்ட நிலையில் காணப்பட்டார் எனத் தெரிவித்துள்ள அப்துல்லா என்பவர், தான் அந்தச் சிறுமியை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தேன் எனவும் பின்னர் ஏனையவர்கள் இணைந்து காப்பாற்றினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “என்னால், அந்தச் சிறுமியை கைவிட முடியவில்லை. ஒருவரைக் காப்பாற்ற முயலும்போது அவருடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் சிறுமியின் தாய் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அவருக்கு தெரிவிக்க முடியவில்லை. அவர் உள்ள நிலைமையை மறக்கச் செய்ய முயன்றேன்.
நான் முதலில் அந்த இடத்திற்குச் சென்றவேளை சிறுமியின் தாயார் உயிருடன் இருந்தார். ஆனால் இரண்டவாது விமானத் தாக்குதலின் பின்னர் அவர் மௌனித்து விட்டார்” என அப்துல்லா தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
விமானதாக்குதல் காரணமாக இடிந்து விழுந்த வீட்டின் கீழ் சிக்கி இரும்புதுண்டொன்றை பிடித்தபடி உயிர் பிழைப்பதற்கு சிறுமி முயல்வதை குறித்த காணொளி காண்பிக்கிறது.
சிரியாவின் வெள்ளை தலைக்கவச மனிதாபிமான அமைப்பைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் சிறுமியை காப்பாற்ற முயல்கின்றார்.
‘எனது அம்மா எங்கே’ என அழுதபடி சிறுமி கேட்பதையும் அவர் அங்கேயிருக்கின்றார் என மனிதாபிமான பணியாளர் தெரிவிப்பதையும் காணமுடிகின்றது.
எனினும் அடுத்தடுத்து இடம்பெற்ற விமானதாக்குதலில் அந்த சிறுமியின் தாயார் உயிரிழந்துவிட்டார் என மனிதாபிமான பணியாளர் ஒருவர் சர்வதேச செய்திச் சேவை ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.
குறிப்பிட்ட பகுதியொன்றை தாக்கிவிட்டு செல்லும் விமானம் மீண்டும் அந்த இலக்கை தாக்கும் நடைமுறை சிரியாவில் உள்ளது. இதன்போதே சிறுமியின் தாயார் கொல்லப்பட்டார் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் மூன்று மற்றும் ஒன்பது வயதான இரு பிள்ளைகளும் உயிரிழந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, முதல் தாக்குதலைத் தொடர்ந்து இரண்டாவது தாக்குதல் இடம்பெற்ற வேளையும் அந்தச் சிறுமி இடிபாடுகளுக்குள் சிக்குண்ட நிலையில் காணப்பட்டார் எனத் தெரிவித்துள்ள அப்துல்லா என்பவர், தான் அந்தச் சிறுமியை தொடர்ந்து அழைத்துக் கொண்டிருந்தேன் எனவும் பின்னர் ஏனையவர்கள் இணைந்து காப்பாற்றினார்கள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “என்னால், அந்தச் சிறுமியை கைவிட முடியவில்லை. ஒருவரைக் காப்பாற்ற முயலும்போது அவருடன் தொடர்ந்து உரையாடிக்கொண்டிருக்க வேண்டும்.
ஆனால் சிறுமியின் தாய் கொல்லப்பட்டுவிட்டார் என்பதை அவருக்கு தெரிவிக்க முடியவில்லை. அவர் உள்ள நிலைமையை மறக்கச் செய்ய முயன்றேன்.
நான் முதலில் அந்த இடத்திற்குச் சென்றவேளை சிறுமியின் தாயார் உயிருடன் இருந்தார். ஆனால் இரண்டவாது விமானத் தாக்குதலின் பின்னர் அவர் மௌனித்து விட்டார்” என அப்துல்லா தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை