அதிக விலைக்கு விற்பனை செய்த வர்த்தகர்களுக்கு எதிராக நடவடிக்கை!!

அரிசியை அதிக விலைக்கு விற்பனை செய்த 512 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாக நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.


நாடளாவிய ரீதியாக சுற்றிவளைப்புக்களை மேற்கொள்வதற்கு பொலிஸாரின் ஒத்துழைப்பினை பெற்றதாக நுகர்வோர் அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் மொஹமட் பவுஸர் தெரிவித்துள்ளார்.

இதன்போதே பல வர்த்தகர்கள் சம்பா மற்றும் நாட்டு அரிசியை கிலோ ஒன்றுக்கு 98 ரூபாய் வரை விற்பனை செய்து வந்தமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, தற்போதைய அரசாங்கம் பெறுமதி சேர் வரி போன்ற வரிகளை குறைக்கப்பட்ட நிலையில், வர்த்தகர்கள் நியாயமான முறையில் செயற்பட வேண்டும் என வர்த்தக ராஜாங்க அமைச்சர் அநுர பிரியதரஷன யாப்பா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.