மீண்டுமொரு மனுவை தாக்கல் செய்தார் ராஜித!

கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது ஏற்பாடு செய்யப்பட்ட வௌ்ளை வான் ஊடக சந்திப்பு தொடர்பாக இரகசிய பொலிஸார் தன்னை கைது செய்வதற்கு முன்னர் பிணையில் விடுதலை செய்து உத்தரவிடுமாறு கோரி நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரட்ன இரண்டாவது முறையாகவும் தாக்கல் செய்த முன்பிணை கோரிய மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், இன்று (திங்கட்கிழமை) கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் மீண்டும் முன்பிணை மனு ஒன்றை அவர் தாக்கல் செய்துள்ளார்.

குறித்த மனுவில் இரகசிய பொலிஸின் பணிப்பாளர் உள்ளிட்ட தரப்பினர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.

குற்றச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவரின் வாக்குமூலத்திற்கு அமைய தன்னை கைது செய்ய இரகசிய பொலிஸார் தயாராவதாக குறித்த முன் பிணை கோரிய மனுவில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையாக இதனை மேற்கொள்ள தயாராவதாக சுட்டிக்காட்டிய அவர் அவ்வாறு கைது செய்வதற்கு முன்னர் தன்னை முன்பிணை அடிப்படையில் விடுவிக்குமாறு நீதிமன்றில் கோரியுள்ளார்.

இதேவேளை, ராஜித சேனாரட்ன இதற்கு முன்னர் தாக்கல் செய்த முன்பிணை கோரிய மனுவும் கொழும்பு நீதவான் நீதிமன்றினால் நிராகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.