இலங்கை பிரதமரை சந்தித்த இந்திய கடற்படைத் தளபதி!

இலங்கை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை இந்தியாவின் கடற்படைத் தளபதி அட்மிரல் கர்மபீர் சிங் சந்தித்துள்ளதாக தனது உத்தியோகபூர்வ டூவிட்டரில் மஹிந்த பதிவிட்டுள்ளார்.


இச்சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில் இரு நாடுகளுக்கிடையே பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை தொடர்பான பல விஷயங்கள் விவாதிக்கப்பட்டன என அவர் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு கடற்படையினரும் கூட்டு பயிற்சியில் பங்கேற்பது பற்றியும் இந்த சந்திப்பில் விவாதிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.