காணாமல்போனவர் சடலமாக மீட்பு!

திருகோணமலை மாவட்டத்தின் அக்போபுர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணாமல் போன நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக அக்போபுர பொலிஸார் தெரிவிக்கின்றனர்.


தல்கஸ்வெவ பகுதியைச் சேர்ந்த 75 வயதுடைய எம்.ஹப்புஹாமி, ஏழு பிள்ளைகளின் தந்தையொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சனிக்கிழமை (21) காலையில் இருந்து காணாமல் போன நிலையிலே தல்கஸ்வெவ குளத்தில் மிதந்த சடலத்தினை கண்ட மாடு மேய்க்கச் சென்ற ஒருவர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்தே சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.​

சடலமாக மீட்கப்பட்டவர் இருதய நோய்க்குள்ளானவர் என்றும் காணாமல் போன தினத்திலிருந்து பொலிஸிக்கு முறைப்பாடு செய்துள்ளதாகவும் மரணித்தவரின் மகள் தெரிவித்தார்.

சடலம் தற்போது கந்தளாய் தள வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை அக்போபுர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.