குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக முஸ்லிம்கள் போராட்டம்!

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முஸ்லிம்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.


டெல்லி ஜாமா மஸ்ஜித் அருகே  இன்று (வெள்ளிக்கிழமை) குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

திருத்தப்பட்ட குடியுரிமை சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது.

இதன்படி டெல்லியில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க ஜாமா மசூதியில் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை ஜும்மா தொழுகைக்காக ஏராளமான முஸ்லிம்கள் திரண்டனர். தொழுகைக்கு பின்னர் அவர்கள் வீடுகளுக்கு செல்லாமல் மசூதி அருகே  போராட்டத்தில் ஈடுபட்டனர். இன்றைய தினமும் அவர்கள் போராட்டத்தில் ஈடுப்பட்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதன்காரணமாக குறித்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.