உலக நாடுகளுக்கு சவால் விடுத்தார் புடின்!!

உலக நாடுகளை ஒட்டுமொத்தமாக வியப்பில் ஆழ்த்தும் வகையில் புதிய ஆயுத சோதனையை ரஷ்யா முன்னெடுத்துள்ளது. இந்த புதிய ஆயுதத்தை எந்த நாட்டு இராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் புடின் சவால் விடுத்துள்ளார்.


அத்துடன், உலகில் ஹைபர்சொனிக் ஏவுகணையை (Hypersonic Weapons) வெற்றிகரமாக ஏவிய முதல்நாடு என்ற பெருமையை கைவசப்படுத்தியதாக புடின் அறிவித்துள்ளார்.

ரஷ்யாவின் இராணுவ உயரதிகாரிகளுடனான சந்திப்புக்கு பின்னர் முக்கிய ஊடகங்களிடம் தகவல் வெளியிட்ட புடின், “உலக வரலாற்றில் முதன்முறையாக அமெரிக்காவை விட ஒருபடி மேலே சென்று புதிய ஆயுதம் ஒன்றை ரஷ்யா கைவசப்படுத்தியுள்ளது.

மேலும், இந்த ஏவுகணையை உலகின் எந்த நாட்டு இராணுவமும் தடுத்து நிறுத்த முடியாது. வானில் இருந்து வெளியேறிய எரிகல் போன்று இது இலக்கைத் தாக்கி அழிக்கும். ஹைபர்சொனிக் ஆயுதங்களில் நாங்கள் தனித்துவமான முன்னேற்றம் கண்டுள்ளோம். எங்களைப் பிடிக்க மற்ற நாடுகள் முயற்சிக்கின்றன.

ஷிர்கோன் என பெயரிடப்பட்டுள்ள இந்த ஹைபர்சொனிக் ஏவுகணையானது மாக் 9இன் வேகத்தை மிஞ்சும் எனவும் மணிக்கு சுமார் 7 ஆயிரம் மைல்களைத் தாண்டும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் அவங்கார்ட் ஹைபர்சொனிக் மற்றும் கின்ஷ்கால் ஹைபர்சொனிக் ஏவுகணை குறித்து புடின் முதன்முறையாகப் பேசியிருந்தார். அவங்கார்ட் ஹைபர்சொனிக் ஏவுகணையானது ஒலியை விட 20 மடங்கு வேகத்தில் பாயும் எனவும் புடின் கூறியிருந்தார். அதுமட்டுமின்றி, இலக்கை நெருங்க நெருங்க ஆயுதத்தின் போக்கு மற்றும் அதன் உயரத்தைக் கட்டுப்படுத்த முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ரஷ்யாவைப் போலவே, அமெரிக்காவும் சீனாவும் ஹைபர்சொனிக் திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இவ்வாண்டின் தொடக்கத்தில் சீனா ஒரு ஹைபர்சொனிக் விமானத்தை பரிசோதித்ததாகக் கூறியது. அதேநேரத்தில் அமெரிக்க விமானப்படையும் ஒரு ஏவுகணையை உருவாக்கவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.