ஜனவரி மாதத்தில் பொருட்களின் விலை குறையுமா!!

ஜனவரி நடுப்பகுதியில் பல பொருட்களின் விலை குறைக்கப்படுமென அமைச்சர் வாசுதேவா நாணயக்கார தெரிவித்துள்ளார்.


எஹெலியகோட பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

குறித்த மக்கள் சந்திப்பில் வாசுதேவா நாணயக்கார மேலும் தெரிவித்துள்ளதாவது, “தற்போது தேயிலை, மிளகு, இலவங்கப்பட்டை,  முந்திரி ஆகியவற்றின் விலை  அதிகரித்து வருகின்றது.

இதனூடாக பொருட்களை உற்பத்தி செய்யும் மக்களின் வருமானத்தை அதிகரிக்க கூடியதாக இருக்கும்.

இதேவேளை கடந்த ஆட்சி காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பாரிய சரிவை எதிர்கொண்டிருந்தது. அதாவது எமது உற்பத்தி பொருட்களின் விலை மிகவும் வீழ்ச்சியடைந்து காணப்பட்டமையினால்தான், மக்களின் நுகர்வு பொருட்களுக்கு  அப்போது விலை அதிகரிக்கப்பட்டது.

ஆனால் தற்போது  நாம், எமது  மக்களினால் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கு விலையை அதிகரித்து அதனூடாக அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்வடைய செய்யும் செயற்பாடுகளை முன்னெடுக்க ஆரம்பித்துள்ளோம்.

அந்தவகையில் ஜனவரி மாத நடுப்பகுதியில் பொருட்களின் விலை நிச்சயம் குறைக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.