நெதன்யாகு அபார வெற்றி!!
இஸ்ரேலில் ஆளும் லிக்குட் கட்சித் தலைமைக்கு நடந்த வாக்கெடுப்பில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு அமோக வெற்றி பெற்றுள்ளார்.
20 ஆண்டுகளாக லிக்குட் கட்சியின் தலைவராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு, 72.5 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் கல்வியமைச்சர் கைடியான் மோஷேசார், வெறும் 27.5 சதவீத வாக்குகளையே பெற்றார்.
இதன் மூலம், இஸ்ரேலில் மிக நீண்ட காலமாக பிரதமர் பதவியை வகித்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்வரும் தேர்தலில் லிக்குட் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்பார்.
இந்த மகத்தான வெற்றிக்கு வாக்களித்த கட்சியின் பிரதிநிதிகளுக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘கடவுளின் உதவியாலும் உங்களின் ஆதரவாலும் எதிர்வரும் தேர்தலில் நமது கட்சியை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வேன். அதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அபரிமிதமான வளர்ச்சிப்பாதைக்கு இஸ்ரேலை கொண்டு செல்லலாம்’ என பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த இரண்டாம் முறை தேர்தலில்கூட நெதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது.
நீலம் வெள்ளை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு மீண்டும் ஒரு தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பில் பலமுறை ஆட்சி செய்த லிக்குட் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் காபந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றார்.
70 வயதான பெஞ்சமின் நெதன்யாகு ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
20 ஆண்டுகளாக லிக்குட் கட்சியின் தலைவராக இருந்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு, 72.5 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றுள்ளார்.
அவரை எதிர்த்துப் போட்டியிட்ட முன்னாள் கல்வியமைச்சர் கைடியான் மோஷேசார், வெறும் 27.5 சதவீத வாக்குகளையே பெற்றார்.
இதன் மூலம், இஸ்ரேலில் மிக நீண்ட காலமாக பிரதமர் பதவியை வகித்து வரும் பெஞ்சமின் நெதன்யாகு, எதிர்வரும் தேர்தலில் லிக்குட் கட்சி வெற்றி பெற்றால் மீண்டும் பிரதமராகப் பொறுப்பேற்பார்.
இந்த மகத்தான வெற்றிக்கு வாக்களித்த கட்சியின் பிரதிநிதிகளுக்கு நெதன்யாகு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது,
‘கடவுளின் உதவியாலும் உங்களின் ஆதரவாலும் எதிர்வரும் தேர்தலில் நமது கட்சியை மிகப்பெரிய வெற்றியை நோக்கி அழைத்துச் செல்வேன். அதன் மூலம் நாம் அனைவரும் ஒன்றிணைந்து அபரிமிதமான வளர்ச்சிப்பாதைக்கு இஸ்ரேலை கொண்டு செல்லலாம்’ என பதிவிட்டுள்ளார்.
இஸ்ரேல் நாடாளுமன்றத்துக்கு சமீபத்தில் நடந்த இரண்டாம் முறை தேர்தலில்கூட நெதன்யாகுவின் லிக்குட் கட்சி உள்பட எந்த கட்சிக்கும் பெரும்பான்மை பலம் கிடைக்காததால் அங்கு யாராலும் ஆட்சி அமைக்க முடியாத அரசியல் சூழல் நிலவுகிறது.
நீலம் வெள்ளை கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஆதரவுடன் கூட்டணி அரசு அமைப்பதற்கு எடுக்கப்பட்ட முடிவுகளும் தோல்வி அடைந்து விட்ட நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்துக்கு மீண்டும் ஒரு தேர்தலை நடத்த வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது.
இந்நிலையில், நேற்று (வெள்ளிக்கிழமை) நடைபெற்ற வாக்கெடுப்பில் பலமுறை ஆட்சி செய்த லிக்குட் கட்சி தலைவர் பதவிக்கான தேர்தலில் காபந்து பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெற்றி பெற்றார்.
70 வயதான பெஞ்சமின் நெதன்யாகு ஊழல் வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்படுவதை எதிர்நோக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை