நாவிதன்வெளியில் சமய சக வாழ்வு நிகழ்ச்சி திட்டம்!!

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நாவிதன்வெளி பிரதேச செயலகம் நடத்தும் சமய சக வாழ்வு நிகழ்ச்சி இன்று (திங்கட்கிழமை) இடம்பெற்றது.


பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் நாவிதன்வெளி கலாசார மண்டபத்தில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் பிரதம அதிதியாக அம்பாறை மாவட்ட செயலக மேலதிக அரசாங்க அதிபர் வே.ஜெகதீசன் உட்பட சகல மத தலைவர்களும் கலந்து சிறப்பித்தார்கள்.

மேலும் சமய அறநெறி பாடசாலை மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் மற்றும் அறநெறி கீதம் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கலாசார உத்தியோகர்தர்கள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.