முல்லை, பரந்தனைச் சேர்ந்த மாற்றுத்திறனாளிகளின் பிள்ளைகள் 500 பேருக்கு க.வி.விக்னேஸ்வரன் கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு!

போரினால் பாதிப்புற்று மாற்றுத்திரனாளிகளாக்கப்பட்ட முல்லைத்தீவு மற்றும் பரந்தன் பகுதிகளைச் சேர்ந்த
குடும்பங்களிலுள்ள 500 மாணவர்களுக்கு இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையுடன்உ தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் வட மாகாண முன்னாள் முதலமைச்சருமான கௌரவ நீதியரடர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களால் இன்று செவ்வாய்க்கிழமை வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

"ஒளிரும் வாழ்வு” நிறுவனத்தின் ஏற்பாட்டில் இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையுடன் முல்லைத்தீவில் இன்று காலை 9 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த 350 மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து, வன்னி விழிப்புணர்வற்றோர் சங்கத்தின் ஏற்பாட்டில் இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையுடன் பரந்தனில் இன்று காலை 11 மணிக்கு நடைபெற்ற நிகழ்வில் மாற்றுத்திறனாளிகளின் குடும்பங்களைச் சேர்ந்த 150 மாணவர்களுக்கும் இவ்வாறு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இலண்டன் கனக துர்க்கை அம்மன் ஆலயத்தினரின் அனுசரணையில் மேற்கொள்ளப்பட்ட இக்கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வுகளில் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்த தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமும் முன்னாள் வட மாகாண முதலமைச்சருமான கௌரவ நீதியரசர் க.வி.விக்னேஸ்வரன் அவர்கள் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.