“ ஈழத் தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படாது” !!
ரவிக்குமார் எம்.பி எழுப்பிய கேள்விக்கு
மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பதில்
“ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும், வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும்” என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நித்தியானந்த ராய் அளித்துள்ள பதிலில்:
“ இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல் நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை ( naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்ட விரோமாகக் குடியேறியவர்கள் என மறைமுகமாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Ravi Kumar
மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் பதில்
“ கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேல் இந்தியாவில் வசிக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு நிரந்தரக் குடியுரிமை அளிக்கப்படுமா? அவ்வாறெனில் விவரங்களைத் தெரிவிக்கவும், வழங்கப்படாதெனில் காரணங்களைக் கூறவும்” என்று விழுப்புரம் எம்.பி ரவிக்குமார் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.
அதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய வெளியுறவுத்துறை துணை அமைச்சர் நித்தியானந்த ராய் அளித்துள்ள பதிலில்:
“ இந்தியக் குடியுரிமை என்பது இந்தியக் குடியுரிமைச் சட்டம் 1955 மற்றும் குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்தச் சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல் நாட்டவர் எவரும் இந்தியக் குடியுரிமை பெற முடியும். அந்தச் சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை ( naturalisation ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்ட விரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்தியக் குடியுரிமையைப் பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.
ஈழத் தமிழ் அகதிகள் அனைவரும் சட்ட விரோமாகக் குடியேறியவர்கள் என மறைமுகமாக மத்திய அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
Ravi Kumar

.jpeg
)





கருத்துகள் இல்லை