கமல்ஹாசனை அழைத்த திமுக!!

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக வரும் 23ஆம் தேதி நடைபெறும் பேரணியில் கலந்துகொள்ள கமல்ஹாசனுக்கு திமுக அழைப்பு விடுத்துள்ளது.

குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வேண்டுமென நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகின்றன. இதுதொடர்பாக சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில், தோழமைக் கட்சிகள் பங்கேற்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. அதில், குடியுரிமை திருத்தச் சட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி வரும் 23ஆம் தேதி சென்னையில் மாபெரும் பேரணி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இதனிடையே போராட்டத்தில் ஈடுபட்ட சென்னை பல்கலைக் கழக மாணவர்களை நேற்று சந்தித்து ஆதரவு தெரிவித்த மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், திமுக கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணியில் மக்கள் நீதி மய்யம் பங்கேற்கும் எனத் தெரிவித்தார். திமுகவை கடுமையாக விமர்சித்துவந்த கமல்ஹாசன், திமுக பேரணியில் பங்கேற்க முடிவு செய்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் சென்னை ஆழ்வார்ப்பேட்டையிலுள்ள மக்கள் நீதி மய்யம் அலுவலகத்திற்கு இன்று (டிசம்பர் 19) சென்ற திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தலைமை நிலையச் செயலாளர் பூச்சி முருகன் ஆகியோர் கமல்ஹாசனை நேரில் சந்தித்து உரையாடினர். தொடர்ந்து, வரும் 23ஆம் தேதி திமுக மற்றும் கூட்டணிக் கட்சிகள் நடத்தும் பேரணியில் கலந்துகொள்ள வேண்டுமென அழைப்பு விடுத்தனர். அப்போது மக்கள் நீதி மய்யத்தின் பொதுச் செயலாளர் அருணாச்சலம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.
திமுகவின் பேரணியில் திராவிடர் விடுதலைக் கழகமும் பங்கேற்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள திவிக தலைவர் கொளத்தூர் மணி, “இந்தியாவை இந்து ராஷ்டிரமாக மாற்றும் RSS ன் திட்டப்படி மத்திய பாஜக அரசால் கொண்டு வரப்பட்டுள்ள சட்டம் தான் புதிய குடியுரிமை திருத்த சட்டம் .டிசம்பர் 23 திங்கள் அன்று அனைத்துக் கட்சி சார்பில் சென்னையில் நடைபெற உள்ள 'குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் பேரணி’யில் திராவிடர் விடுதலைக் கழகம் பங்கேற்கிறது” என்று தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.