நோயாளர்களைப் பார்வையிடும் நேரத்தில் மாற்றம்!!

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை விடுதியில் தங்கியிருந்து சிகிச்சை பெறும் நோயாளர்களை, பொதுமக்கள் பார்வையிடும் நேரத்தில் இன்று முதல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


இதனை , வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.

அதனடிப்படையில், மாலை 04 மணிமுதல் 05 மணி வரையாக இருந்த பார்வையிடும் நேரம், மாலை 05 மணிமுதல் 06 மணி வரை என மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதேவேளை , காலை 06 மணி முதல் 07 மணி வரை நண்பகல் 12 முதல் 01 மணிவரையான நேரங்கள் மாற்றத்துக்கு உட்படவில்லை.

அந்நேரங்களில் வழமைபோன்றே பொதுமக்கள், நோயாளர்களைப் பார்வையிட முடியுமெனவும் வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.