முன்னைய நன்மைகள் தொடர வேண்டும் – ரணில்!!

2015 ஆம் ஆண்டில் இலங்கையை சமூக, அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக வளமான நாடாக மாற்றியாதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.


கடந்த நான்கரை ஆண்டுகளில் செய்த விடயங்களை சுட்டிக்காட்டி ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் வெளியிட்டுள்ள புத்தாண்டு செய்தியிலேயே இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் தனது தலைமையிலான அரசாங்கம் சர்வதேச சமூகங்களிடையே நாட்டின் எதிர்மறையான கருத்துக்களை வெற்றிகரமாக முறியடித்து என்றும் நிலையான வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை உறுதி செய்தது என்றும் சுட்டிக்காட்டினார்.

அப்போதைய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட அனைத்து சாதகமான முயற்சிகளும் புதிய ஆண்டில் தடையின்றி தொடரும் என்று ரணில் விக்கிரமசிங்க நம்பிக்கை வெளியிட்டார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.