அவுஸ்ரேலியாவில் அவசர நிலை பிரகடனம்!

அவுஸ்ரேலியாவில் வேகமாக பரவி வரும் காட்டுத் தீ காரணமாக சில இடங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.


அவுஸ்ரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தின் தென் கடற்கரைப் பகுதியில் காட்டுத் தீயின் தீவிரம் காரணமாக வெப்பநிலை அதிகரித்து வருகின்றது.

இதன்காரணமாக குறித்த பகுதியில் உள்ள மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. காட்டுத் தீ காரணமாக இதுவரை ஆயிரத்து 300 வீடுகள் இரையாகியுள்ளன.

சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

அத்துடன், அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் இந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளன.

இந்நிலையில் அவுஸ்ரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் உள்ள தென் கடற்கரைப் பகுதிகளில் காட்டுத் தீ தீவிரமாகி வருவதால் வெப்பம் அதிமாகும் என்பதால் அப்பகுதியில் உள்ள மக்களை வெளியேறுமாறு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் 7 நாட்களுக்கு அவசர நிலை பிரகனடப்படுத்தப்பட்டுள்ளது.

கடற்கரைப் பகுதிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கித் தவிப்பதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

தொடர்ந்து காட்டுத் தீயை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி வருகின்றனர்.

இந்தநிலையில் இதுகுறித்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்ரேலிய பிரதமர்,

‘காட்டுத் தீயை அணைக்க அனைத்தும் முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. காட்டுத் தீயை அணைக்கப் போராடுபவர்கள் மீது நம்பிக்கை வைப்பதே சிறந்த வழி’ எனக் குறிப்பிட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.