நியுசிலாந்தில் வளிமாசடையும் நிலை!

நியுசிலாந்தில் வளிமாசடையும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அவுஸ்ரேலியாவிலிருந்து சுமார் 2,000 கிலோமீற்றர் தொலைவில் உள்ள தீவு நாடான நியூசிலாந்தின் தென்பகுதியிலேயே இந்தப் பாதிப்பு உணரப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் காட்டுத் தீயினால் ஏற்பட்டுள்ள புகை, நியூசிலாந்தின் தெற்குத் தீவினைச் சென்றடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்காரணமாக குறித்த பகுதிகளில் உள்ள மக்களை மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அவுஸ்ரேலியாவில் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் பல்வேறு மாகாணங்களில் காட்டுத் தீ பரவி வருகிறது. காட்டுத் தீ காரணமாக இதுவரை ஆயிரத்து 300 வீடுகள் இரையாகியுள்ளன.

சுமார் 5.5 மில்லியன் ஏக்கர் நிலங்களும் பாதிக்கப்பட்டுள்ளன. கடும் தண்ணீர் தட்டுப்பாடு நிலவி வருவதால் நாட்டின் பல இடங்களில் வறட்சி நிலவி வருகிறது.

அத்துடன், அவுஸ்ரேலியாவில் ஏற்பட்டுள்ள காட்டுத் தீ காரணமாக இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளதுடன், 12 பேர் காணாமல் போயுள்ளனர். மேலும் இந்த வாரத்தில் மாத்திரம் சுமார் 200 வீடுகள் சேதமடைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.