சட்டத்தரணி சுகாஸ் விடுத்துள்ள இறுதி எச்சரிக்கை!!

டக்ளஸ் தேவானந்தவே... சாத்தனாகிய நீங்கள் வேதம் ஓத முற்பட வேண்டாமென இறுதி எச்சரிக்கையை விடுப்பதாகத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் வட்டுக் கோட்டைத் தொகுதி அமைப்பாளரும், சட்டத்தரணியுமான க. சுகாஷ் கடும் ஆவேசத்துடன் தெரிவித்துள்ளார்.


வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்க வடக்கு- கிழக்கு இணைப்பாளரும், வவுனியா பிரஜைகள் குழுவின் தலைவருமான கோ.ராஜ்குமார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வவுனியாவில் மிலேச்சத்தனமாகத் தாக்கப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும், நீதி கோரியும் இன்று யாழ். நகரிலுள்ள பேருந்து நிலையம் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்ட எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவரான சித்தாத்தன் கடத்தலில் ஈடுபட்டமை யாவரும் அறிந்த விடயம் ஆனால் இன்று சட்டத்தரணி க. சுகாஷ் மீண்டும் உரக்க கூறியுள்ளமை மக்கள் மத்தியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

சட்டத்தரணி க. சுகாஷின் இந்த எச்சரிக்கை அறிவிப்பு அரசியலில் புதிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.