வவுனியாவில் பெண்கள் ஒன்றியம் விழிப்புணர்வு ஊர்வலம்!!

வவுனியா வர்த்தக நிலையங்களில் பணி புரியும் பெண் பணியாளர்களின் உரிமைகளைப் பாதுக்காக்கக் கோரிய விழிப்புணர்வு ஊர்வலம் முன்னெடுக்கப்பட்டது.


வவுனியா மாவட்ட உள்ளூராட்சி பெண்கள் ஒன்றியம் மற்றும் பொது அமைப்புகளின் ஏற்பாட்டிலான குறித்த பேரணி இன்று (வெள்ளிக்கிழமை) வவுனியா நகரில் இடம்பெற்றிருந்தது.

வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பாக ஆரம்பமாகிய இந்தப் பேரணி கண்டிவீதி வழியாக, வவுனியா நகரசபை வளாகத்திற்குச் சென்றது. அங்கு உப நகரபிதா சு.குமாரசாமியிடம் மகஜர் கையளிக்கப்பட்டதுடன், அங்கிருந்து வவுனியா மாவட்டச் செயலகத்திற்குச் சென்று அரச அதிபர் எம்.கனீபாவிடமும் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ‘ஆணுக்குப் பெண் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்’, ‘அடிக்காதே அடிக்காதே பெண்ணை அடிக்காதே’, ‘வேண்டாம் வேண்டாம் வன்முறை வேண்டாம்’ போன்ற கோசங்களை எழுப்பியிருந்தனர்.

அண்மையில் வவுனியா வர்த்தக நிலையமொன்றில் பணி புரித்த பெண் பணியாளர், குறித்த நிலையத்தின் முதலாளியின் சகோதரரால் தாக்கப்பட்டிருந்தமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.