இலங்கை தமிழர்களுக்காக மத்திய அரசிடம் வலியுறுத்துவோம் – பன்வாரிலால் புரோஹித்!!

இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க தமிழக அரச மத்திய அரசை வலியுறுத்தும் என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார்.


தமழகத்தின் 15ஆவது சட்டப்பேரவையின் எட்டாவது கூட்டத்தொடர் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகியுள்ளது. இதில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், ‘இலங்கை தமிழ் அகதிகளுக்கு இரட்டைக் குடியுரிமை வழங்க தமிழக அரசு மத்திய அரசை வலியுறுத்தும்.
தமிழக மக்கள் எந்த ஒரு மதம், சமயத்தை பின்பற்றினாலும், அவர்களை தமிழக அரசு பாதுகாக்கும். தமிழக மீனவர்கள் பிரச்சினையில் மத்திய அரசு தலையிட்டு சுமூக தீர்வுகாண வேண்டும்.

முல்லைப் பெரியாறு அணையை வலுப்படுத்தத் தேவையான அனுமதியை கேரள, மத்திய அரசுகள் தர வேண்டும். மேகதாது திட்ட அறிக்கையை மத்திய அரசு நிராகரிக்க வேண்டும்.

காவிரி-குண்டாறு நதிகள் இணைக்கும் பணியை தமிழக அரசு செயல்படுத்தும். கோதாவரி ஆற்றிலிருந்து குறைந்தபட்சம் 200 டிஎம்சி தண்ணீரை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம்.

ஜெயலலிதாவுக்கு 50.80 ரூபாய் கோடி மதிப்பில் விரைவில் மணிமண்டபம் கட்டிமுடிக்கப்படும். ஒவ்வொரு மாதமும் நவம்பர் 1-ஆம திகதியை தமிழ்நாடு நாள் என அறிவித்ததற்காக முதல்வருக்கு பாராட்டுகள’; எனத் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.