பெண் ஊழியரின் கன்னத்தில் அறைந்த அதிகாரி கைது!!

பெண் ஊழியரின் கன்னத்தில் அறைந்த கமநலசேவைகள் திணைக்களத்தின் தலைமை உத்தியோகத்தரை இன்று (06) அதிகாலை மடக்கிப் பிடித்ததாக சம்மாந்துறைப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


நிந்தவூர் கமநல கேந்திர மத்திய நிலையத்தில் பணியாற்றும் நிலைய முகாமைத்துவ உதவியாளர் தவப்பிரியா சுபராஜ் (34) என்பவரை, அந்நிலையத்தின் தலைமை கமநல அபிவிருத்தி உத்தியோகத்தர் ஜ.எல்.ஏ.கார்லிக், கடந்த 1ஆம் திகதியன்று கன்னத்தில் ஓங்கி அறைந்ததாக பொலிஸில் முறையிடப்பட்டுள்ளது.

தாக்குதலால் பாதிக்கப்பட்ட தவப்பிரியா கல்முனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றார்.

நிலைமை விபரீதமானதும், தாக்குதலை மேற்கொண்ட அரச உத்தியோகத்தர் தலைமறைவானார்.

அவர் பதுங்கியிருந்த இடத்தில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார்.

அவரை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, தாக்கிய அரச உத்தியோகத்தரை கைதுசெய்ய வலியுறுத்தி, பெண்ணுரிமை அமைப்புகள் இன்று (06) ஆர்ப்பாட்டப் போராட்டத்திற்கு திட்டமிட்டிருந்தன. எனினும், சந்தேகநபர் மடக்கிப் பிடிக்கப்பட்டதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டுள்ளது.

இதேவேளை, கல்முனை ஆதார வைத்தியசாலையில் கடந்த 05 நாள்களாக சிகிச்சைபெற்று வந்த தாக்குதலுக்குள்ளான பெண் ஊழியர் தவப்பிரியா, மேலதிக சிகிச்சைக்காக, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு, நேற்று (05) இடமாற்றப்பட்டுள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.