நாவற்குழியில் வரையப்பட்டு வரும் ஓவியங்கள்.!📷

ஜனாதிபதியின் தேசத்தை அழகாக்குவோம் என்ற தொனிப்பொருளிலிலான வேலைத்திட்டத்தின் கீழ் யாழ்.மாவட்ட கலாசார அலுவல்கள் திணைக்களப் பிரிவினரால் மக்களின் கலை கலாசாரங்களை பிரதிபலிக்கும் சுவர் ஓவியங்களைப் பொது இடங்களில் வரைந்து அழகுபடுத்தும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ஆர்.கிருஸ்ணகுமார் தெரிவித்துள்ளார்.

இவ்வேலைத்திடடத்தின் ஆரம்ப நிகழ்வாக நேற்றுமுன்தினம் சனிக்கிழமை ஏ-9 வீதியில் நாவற்குழி அரச களஞ்சிய வெளிப்பகுதியில் சுவர் ஓவியங்களை வரையும் பணி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இச்சுவர் ஓவியங்களை காலாசரப் பிரிவின் வழிகாட்டலின் கீழ் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஓவியக்கலைஞர் வி.பிரபாகரன் (குகன்) தாமாகவே முன்வந்து அன்பளிப்பாக வரைந்து வருகின்றார்.
இவர் இலங்கையில் மட்டுமல்லாது மலேசியா, சிங்கப்பூர் என வெளிநாடுகளில் உள்ள ஆலயங்களில் ஓவியங்களை வரைந்து வருகின்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை யாழ்.மாவட்டத்தில் இவ்வாறு பல இடங்களில் ஓவியங்களை வரைந்து அழகுபடுத்துவதற்கு பல ஓவியர்கள் முன்வந்துள்ளனர். இவ்வாறு கிராமங்கள் பொதுவீதிகளில் ஓவியங்களை வரைந்து நாட்டை அழகுபடுத்த விரும்புவோர் கலாசார அலுவல்கள் திணைக்கள அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு குறித்த ஓவியங்களை வரையமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-செ.நிரூஜன்- 
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.