30 கி.மீ. தூரத்திற்கு நீண்ட இறுதி ஊர்வலம் - வியப்பில் உலகநாடுகள்!

அமெரிக்காவால் கொல்லப்பட்ட இரான் புரட்சிகர இராணுவத்தின் தளபதி காசெம் சுலேமானீக்கு அஞ்சலி செலுத்த, ஒன்று திரண்ட ஊர்வலத்தை கண்டு உலகமே வியப்பில் ஆழ்ந்துள்ளது.


மத்திய கிழக்கு நாடுகள் முழுவதும் இரான் செல்வாக்கு மிகுந்த பிராந்தியமாக உருவெடுத்தற்கு முக்கிய காரணமாக விளங்கிய காசெம் சுலேமானீயின், இறுதி ஊர்வலம் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஈரானில் தலைநகர் டெஹ்ரானில் நடந்தது.

மிக பிரமாண்டமாக நடந்த இந்த இறுதி ஊர்வலத்தில், வடகிழக்கு நாட்டின் தலைவர்கள், ஈரான், ஈராக்கை சேர்ந்த முக்கிய தலைவர் இந்த இறுதிச்சடங்கில் கலந்து கொண்டனர்.

குறிப்பாக மொத்தம் 30 கிமீ தூரத்திற்கு இந்த கூட்டம் நீண்ட இந்த இறுதி ஊர்வலத்தில், 15 இலட்சத்திற்கும் அதிகமான மக்கள் கலந்துக் கொண்டதாக கூறப்படுகின்றது. உலகிலேயே யாருடைய இறுதிச்சடங்கிற்கும் இவ்வளவு கூட்டம் கூடியது கிடையாது என கூறப்படுகின்றது.

ஈராக்கில் உள்ள பாக்தாத் சர்வதேச விமான நிலைய வளாகத்தில், கடந்த வெள்ளிக்கிழமை, அமெரிக்கா நடத்திய அமெரிக்க ஆளில்லா விமான ஏவுகணை தாக்குதலில், ஈரானிய புரட்சி பாதுகாப்புப் படையின் குத்ஸ் படைப்பிரிவுத் தளபதி காசிம் சோலிமானி, ஹஷீத் கிளர்ச்சியாளர் குழுவின் முக்கிய தளபதி அபு மகாதி உள்ளிட்ட 7 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த விவகாரம் உலகளவிலபேசும் பொருளாய் மாறியுள்ள நிலையில், இருநாடுகளுக்கிடையிலான மோதல் தீவிரமடையும் போது, இது எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போராக மாறும் என உலக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.