வீதியால் சென்ற சிறுவர் மீது வான் மோதி விபத்து!

துவிச்சக்கரவண்டியுடன் கயஸ் வான் மோதியதில் மாலை வகுப்பிற்கு சென்று வீடு திரும்பிய வேளை சகோதரர்கள் இருவர் காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இந்த சம்பவம் 6/1/2020 திங்கட்கிழமை இரவு 7.00 மணிக்கு
வட தமிழீழம் , மீசாலை ஐயா கடைச் சந்தியில் இடம் பெற்றது

புகையிரத தண்டவாளப் பகுதியில் இருந்து ஏ9 வீதியை கடந்து மறுபக்கம் சென்ற வேளையில்  சாவகச்சேரி பகுதியில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற கயஸ் வாகனம் மோதியதில் சிறுவனும் சிறுமியும் காயமடைந்துள்ளனர்.

கச்சாய் வீதி சாவகச்சேரியைச் சேர்ந்த விஜயகரன் கவுதீகன் வயது 18, விஜயகரன் சாதினி வயது-14 ஆகியோரே காயமடைந்த நிலையில் சாவகச்சேரி வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.