புலமைப்பரிசில் மீள்பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை!!

ஐந்தாம் தர புலமைப் பரீட்சை தொடர்பில் கிடைக்கப்பெற்றுள்ள மீள்பரிசீலனைகளை ஆய்வுக்கு உட்படுத்திய பின்னர் பெறுபேறுகளை வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.


குறித்த பெறுபேறுகள் பாடசாலைகளின் அதிபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை ஒன்றின் ஊடாக குறிப்பிட்டுள்ளது.

மீள்பரிசீலனைகளை ஆய்வுக்கு உட்படுத்தியதன் பின்னரான பெறுபேறுகளை, பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தித்திற்குள் பிரேவேசித்து சரியான பரீட்சை சுட்டெண்ணை பதிவு செய்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும்.

இதேவேளை இந்த ஆண்டில் அனைத்து அரச பாடசாலைகளுக்கும், பிரிவெனா மாணவர்களுக்கும் சீருடைகளை வழங்குவதற்கான வவுச்சர்களை விநியோகிக்கும் நடவடிக்கைகள் தற்போது நிறைவு செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய இன்று முதல் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து பாடசாலைகளில் உள்ள மாணவர்களும் வவுச்சர்களை பெற்றுக்கொள்வதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக கல்வி அமைச்சு அறிக்கை ஒன்றின் ஊடாக தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டில் பாடசாலை சீருடைக்காக அரசாங்கம் 2 ஆயிரத்து 900 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது.

11 கட்டங்களாக சீருடைகளுக்கான வவுச்சர்கள் அச்சிடப்பட்டுள்ளன.

இதேநேரம் கஷ்ட, அதிக கஷ்ட மற்றும் 100 இற்கும் குறைவான மாணவர்களை கொண்ட பாடசாலைகளில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் பாதணிகளை பெற்றுக்கொள்வதற்கான வவுச்சர்களை வழங்குவதற்கும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய 7 லட்சம் பாதணிகளுக்கான வவுச்சர்களுக்காக 958 மில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.