ஈரான், ஈராக்கில் அமெரிக்க விமானங்கள் பறக்கத் தடை!

ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்க பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளது.

அமெரிக்காவை பழி தீர்க்கும் வகையில், ஈராக் தலைநகர் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க அல் ஆசாத் விமான படை தளம் மீது ஈரான் அடுத்தடுத்து 9 முறை ஏவுகணை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

உள்ளூர் நேரப்படி நேற்று மாலை 5.30 மணிக்கு சுமார் 12 ஏவுகணைகளை வீசி ஈரான் தாக்குதலை நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

இதனால் போர் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் ஈரான், ஈராக் மற்றும் வளைகுடா நாடுகளில் அமெரிக்காவின் பயணிகள் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.