யாழ் பல்கலையில் அரங்கேறும் அமுதவிழா!!

தமிழரின் தொன்மையையும் பெருமையையும் உலகறியச் செய்யும் வகையில் தமிழரின் பாரம்பரியம் மிக்க கலைநயத்தை வெளிப்படுத்தும் விதமாக “தமிழமுதம்” மிகச் சிறப்பாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.


இரண்டாவது வருடமாகவும் மொழிதனை கடையும் இளையவர் பயணம் என்ற தொனிப்பொருளில் “தமிழமுதம்” என்னும் இயல், இசை, நாடகம் என முத்தமிழ் அரங்கேற்றப்பட்டு வருகிறது.

தமிழரின் பாரம்பரிய கலைகளான நாட்டுக்கூத்து வில்லிசை, பறை, உட்பட பல்வேறு நிகழ்வுகளை மாணவர்கள் நடத்திவருகிறார்கள்.

இந்தநிகழ்வில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள், துறைசார்கலைஞர்கள் உட்பட பல்வேறு தரப்பினரும் பங்கு கொண்டுள்ளனர்.

இந்த நிகழ்வு இன்று யாழ்பல்கலைக்கழக முன்றலில் பிரமாண்ட மேடையில் காலை 8.30 மணி ஆரம்பமாகியுள்ளது. இந் நிகழ்வுகள் இரவு 9.30 மணிவரை நடைபெறவுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.