பல உயிர்களை பலியெடுத்தது வெள்ளைக்கோடு!

மட்டக்களப்பு சந்திவெளி பிரதேச வைத்தியசாலைக்கு அருகாமையில் பல்லாண்டு காலமாக பஸ் தரிப்பிடமொன்று இருந்து வருவது யாவரும் அறிந்ததே.


ஆனால் பஸ் நிலையத்தை கவனத்தில் கொள்ளாது, அதற்கு மிக அருகாமையிலேயே பாதசாரிகள் வீதியை கடந்து செல்ல வெள்ளைக் கோட்டினை அமைத்திருப்பது சரியானதல்ல.

பஸ் நிலையத் தரிப்பிடத்தில் பஸ் ஒன்று நிறுத்தியிருக்கும்போது,

பின்னால் வரும் வாகனங்கள், நிறுத்தப்பட்டிருக்கும் பஸ், தரிப்பிடத்துக்காக நிறுத்தப்பட்டிருக்கிறதா? அல்லது வெள்ளைக்கோட்டின் வழியாக யாரும் பயணிப்பதால் நிறுத்தப்பட்டிருக்கிறதா? என்ற சந்தேகத்துடன் வாகனத்தை செலுத்துவதால் பலரின் உயிர்களை காவு கொண்ட இடமாக இந்த வெள்ளைக்கோடு காணப்படுகிறது.

எனவே தயவுசெய்து இவ் வெள்ளைக்கோட்டினை பொருத்தமான இடத்துக்கு மாற்றியமைப்பதன் மூலம் விபத்துக்களையும், மரணங்களையும் தவிர்த்துக்கொள்ளலாம்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.