ஒத்திவைக்கப்பட்டது கன்னியா வழக்கின் முக்கிய தீர்ப்பு!!
திருகோணமலை கன்னியா வழக்கில் இடைபுகு மனுதாரராக வில்கம் விகாரையின் பௌத்த நிர்வாகப்பிரிவை இணைப்பதா இல்லையா என்பது குறித்த வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி மேல்நீதிமன்றம் அறிவிக்கும் என திருகோணமலை மேல்நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
அதற்கு முன்னர் எதிர்வரும் பெப்ரவரி 10 திகதி வழக்கில் சம்பந்தப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களம், பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா, வில்கம் விகாரை நிர்வாகம் உள்ளிட்ட மூன்று பிரிவினரையும் எழுத்துமூலமான ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாவில் பிள்ளையார் ஆலய நிர்வாகம் சார்பில் தர்மகர்த்தாவினால் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2019 நவம்பர் 25ஆம் திகதி எடுத்துக்கொண்ட போது தம்மையும் இவ்வழக்கில் இணைத்துக்கொள்ளுமாறு வில்கம் விகாரையின் சார்பில் இடைப் புகுதல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
கன்னியாவில் தொல்பொருள் திணைக்களத்தினால் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாவின் காணி எடுத்தமை தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது. இது தொடர்பான வழக்கிலேயே வில்கம் விகாரையின் சார்பில் இடைபுகு மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இம்மனுவை எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான விடயம் நேற்று நடைபெற்ற அமர்வில் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த இடைபுகு மனுவை கன்னியா பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சார்பில் ஆஜாரன சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் தமது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டனர். ஆயினும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக ஆஜரான அதிகாரிகள் தாம் அதனை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி மூன்று பிரிவினரது நிலப்பாட்டின் எழுத்து மூலமான ஆவணத்தை எதிர்வரும் பெப்ரவரி 10 திகதி மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
குறித்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 18ஆம் திகதி மேல்நீதிமன்றம் அறிவிக்கும் என திருகோணமலை மேல்நீதிமன்றம் நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது.
அதற்கு முன்னர் எதிர்வரும் பெப்ரவரி 10 திகதி வழக்கில் சம்பந்தப்பட்ட சட்டமா அதிபர் திணைக்களம், பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா, வில்கம் விகாரை நிர்வாகம் உள்ளிட்ட மூன்று பிரிவினரையும் எழுத்துமூலமான ஆவணத்தை சமர்ப்பிக்குமாறு மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டுள்ளார்.
கன்னியாவில் பிள்ளையார் ஆலய நிர்வாகம் சார்பில் தர்மகர்த்தாவினால் தொடரப்பட்ட வழக்கு கடந்த 2019 நவம்பர் 25ஆம் திகதி எடுத்துக்கொண்ட போது தம்மையும் இவ்வழக்கில் இணைத்துக்கொள்ளுமாறு வில்கம் விகாரையின் சார்பில் இடைப் புகுதல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டது.
கன்னியாவில் தொல்பொருள் திணைக்களத்தினால் பிள்ளையார் ஆலய தர்மகர்த்தாவின் காணி எடுத்தமை தொடர்பான வழக்கு மேல் நீதிமன்றில் நடைபெற்றுவருகின்றது. இது தொடர்பான வழக்கிலேயே வில்கம் விகாரையின் சார்பில் இடைபுகு மனு சமர்ப்பிக்கப்பட்டது.
இம்மனுவை எடுத்துக்கொள்வதா இல்லையா என்பது தொடர்பான விடயம் நேற்று நடைபெற்ற அமர்வில் மேல்நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் முன்னிலையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது இந்த இடைபுகு மனுவை கன்னியா பிள்ளையார் ஆலய தர்மகர்த்தா சார்பில் ஆஜாரன சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தலைமையிலான குழுவினர் தமது கடுமையான ஆட்சேபனையை வெளியிட்டனர். ஆயினும் சட்டமா அதிபர் திணைக்களம் சார்பாக ஆஜரான அதிகாரிகள் தாம் அதனை எதிர்க்கவில்லை எனவும் தெரிவித்தனர்.
இந்நிலையில் வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி மூன்று பிரிவினரது நிலப்பாட்டின் எழுத்து மூலமான ஆவணத்தை எதிர்வரும் பெப்ரவரி 10 திகதி மன்றுக்கு சமர்ப்பிக்குமாறு நீதிபதி பணித்துள்ளார்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை