புத்தளத்தில் 3 கிராம் ஹெரோயின் மீட்பு!!

புத்தளம் கல்லடி பகுதியில் நேற்று சிறிலங்கா கடற்படை மற்றும் பொலிசார் இனைந்து மேற்கொண்ட நடவடிக்கையின் போது முச்சக்கரவண்டி ஒன்றிலிருந்து சுமார் 3 கிராம் ஹெரோயின் கண்டுபிடி‍க்கப்பட்டது.


தம்பபண்ணி கடற்படையினர் மற்றும் புத்தளம் பொலிஸாருடன் இனைந்து மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான முச்சக்கர வண்டியொன்றை கண்கானித்த கடற்படையினர் முச்சக்கர வண்டியை சோதனையிட முற்பட்ட போது சந்தேக நபர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன்போது முச்சக்கர வண்டியில் மூன்று கிராம் ஹெராயின் மறைத்து வைக்கப்பட்டிருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது.

ஹெரோயின் கடத்தலுக்காக பயன்படுத்தப்பட்ட முச்சக்கர வண்டி மற்றும் ஹெராயின் ஆகியவை மேலதிக விசாரணைகளுக்காக புத்தளம் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.