முக்கிய தகவல் வெளியிட்டது தேர்தல்கள் ஆணைக்குழு!

2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலில் இந்த மாத இறுதியில் கையொப்பம் இடவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.


அதற்கமைய எதிர்வரும் 24 ஆம் திகதி வாக்காளர் பெயர் பட்டியலில் கையொப்பம் இடப்படவுள்ளது.

எதிர்வரும் பொதுத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் அனைத்தும் 2019 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பெயர் பட்டியலுக்கமையவே நடத்தப்படவுள்ளன.

அதேபோல் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கையும் இதன்போது முன்னெடுக்கப்படவுள்ளது.

புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்வதற்காக பல்வேறு தரப்பினர் விண்ணப்பங்களை முன்வைத்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, உரிய முறையில் கண்காய்வு அறிக்கையை சமர்பிக்காத சில அரசியல் கட்சிகளின் பதிவை இரத்து செய்வதற்கும் தீர்மானித்துள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அங்கீகரிக்கப்பட்ட 70 அரசியல் கட்சிகள் இதுவரை தேர்தல்கள் ஆணைக்குழுவில் பதிவுசெய்துள்ளமை குறிப்பிடதக்கது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.