பிரித்தானிய அரச குடும்பத்திற்குள் ஏற்பட்டுள்ள நெருக்கடி குறித்து ட்ரம்ப்!!

பிரித்தானிய அரச குடும்பத்திற்குள் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கருத்து வெளியிட்டுள்ளார்.


சசெக்ஸ் இளவரசர் ஹரி, சீமாட்டி மேகன் ஆகியோர் பிரித்தானிய அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ளதனால் அரச குடும்பத்தினர் கவலையடைந்துள்ளனர்.

இந்த அறிக்கையை வெளியிடுவதற்கு முன்னர் இளவரசர் ஹரியும் மேகனும் அரச குடும்பத்தின் எந்தவொரு மூத்த உறுப்பினரையும் கலந்தாலோசிக்கவில்லை என்று கூறப்படுகின்றது.

அரச குடும்பத்தின் முதன்மை நிலையில் இருந்து விலகவுள்ளதாக அறிவித்துள்ள அவர்கள் இருவரும் மகாராணியின் மாட்சிமையை ஏற்றுக்கொள்வதாகவும் ஆதரிப்பதாகவும் கூறியுள்ளனர்.

அத்துடன் நிதி ரீதியாக சுயாதீனமாகப் பணியாற்ற தாம் விரும்புவதாகவும் அவர்கள் கூறியுள்ளனர்.

அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து விலகுவதாக மேகனும், ஹரியும் அறிவித்திருப்பது சோகமான செய்தி என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஹரி மற்றும் மேகன் அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவது வருத்தமாக இருப்பதாகவும் ட்ரம்ப் கூறியுள்ளார்.

மேலும், ‘எனக்கு ராணி மீது அதிக மரியாதை இருக்கிறது. இது அவருக்கு நடக்கும் என்று நான் நினைக்கவில்லை. அவர் ஒரு சிறந்த பெண்’ எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.