நிதி மோசடியில் ஈடுபட்ட பெண் கைது!!
வெளிநாடுகளில் தொழில் பெற்றுத் தருவதாகத் தெரிவித்து நிதி மோசடியில் ஈடுபட்டபெண்ணொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அனுராதபுரம் - ஹொரவபொத்தானை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு வியட்நாமில் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து நிதி மோசடி செய்ததாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணுக்கு எதிராக ஹொரவபொத்தானை பொலிஸ் நிலையத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஹொரவபொத்தானை பொலிஸாரால் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணால் வெவ்வேறு நபர்களிடம் வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவரும் கைது செய்யப்படவுள்ள நிலையில், அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் இன்று கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
அனுராதபுரம் - ஹொரவபொத்தானை பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு வியட்நாமில் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து நிதி மோசடி செய்ததாக பொலிஸ் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணுக்கு எதிராக ஹொரவபொத்தானை பொலிஸ் நிலையத்தில் 8 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் ஹொரவபொத்தானை பொலிஸாரால் குறித்த பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த பெண்ணால் வெவ்வேறு நபர்களிடம் வெளிநாடுகளில் தொழில் பெற்றுத்தருவதாகத் தெரிவித்து 12 இலட்சத்து 75 ஆயிரம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பெண்ணின் கணவரும் கைது செய்யப்படவுள்ள நிலையில், அவர் தற்போது வெளிநாட்டில் உள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் இன்று கெபிதிகொல்லேவ நீதவான் நீதிமன்றில் ஆஜர் படுத்தப்படவுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
#Tamilarul.net #Tamil #News #Tamil News #Tamil Daily News #Website #Tamil News Paper #Tamil Nadu Newspaper #Online #Breaking News Headlines #Latest Tamil News #India News #World News #Tamil Film #Jaffna #Kilinochchi #Mannar #Mullathivu #Batticola #Kandy #Srilanka #Colombo
கருத்துகள் இல்லை