அதிக இடங்களை வென்ற அதிமுக!

ஊரக உள்ளாட்சித் தேர்தல் கடந்த 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற உறுப்பினர்கள் கடந்த 6 ஆம் தேதி பதவி ஏற்றுக்கொண்டனர். இந்நிலையில் இன்று 27 மாவட்ட ஊராட்சி தலைவர் மற்றும் துணைத் தலைவர்களையும், 314 ஊராட்சி ஒன்றிய தலைவர் மற்றும் துணைத் தலைவர்களையும், 9,624 கிராம ஊராட்சி துணை தலைவர்களையும் தேர்வு செய்ய மறைமுகத் தேர்தல் நடைபெற்றது.


அரிவாள் வெட்டு, மோதல்கள் என பல்வேறு பிரச்சினைகளுக்கு இடையே இன்று காலை நடைபெற்ற ஊராட்சி தலைவர்களுக்கான தேர்தலில் அதிமுக அதிக இடங்களை வென்றுள்ளது. சிவகங்கை மாவட்டத்தில் தேர்தல் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில், 26 மாவட்ட ஊராட்சி தலைவர்களுக்கான தேர்தலில் அதிமுக 14 இடங்களையும் திமுக 12 இடங்களையும் வென்றுள்ளது.

அதிமுக- மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்

1.கோவை- சாந்திமதி

2.தேனி -ப்ரீத்தா

3.கரூர்- எம்.எஸ்.கண்ணதாசன்

4.நாமக்கல் - சாரதா

5.ஈரோடு- கே.நவமணி

6.விருதுநகர்-வசந்திமான் ராஜன்

7.கன்னியாகுமரி- மெர்லியண்தாஸ்

8.சேலம்- ரேவதி (பாமக)

9.அரியலூர் – சந்திரசேகர்

10.திருப்பூர் – சத்யபாமா

11.கடலூர் – திருமாறன்

12.புதுக்கோட்டை -ஜெயலட்சுமி

13. தருமபுரி -யசோதா

14. தூத்துக்குடி – சத்யா

திமுக- மாவட்ட ஊராட்சித் தலைவர்கள்

1.தஞ்சாவூர்- உஷா

2.பெரம்பலூர்-ராஜேந்திரன்

3.நீலகிரி- பாந்தோஷ்

4.திருவாரூர்- கோ.பாலசுப்ரமணியன்

5.திருச்சி- ராஜேந்திரன்

6.மதுரை – சூர்யகலா

7.திண்டுக்கல்-பாஸ்கரன்

8. கிருஷ்ணகிரி- மணிமேகலை

9.திருவண்ணாமலை-பார்வதி ஸ்ரீனிவாசன்

10.திருவள்ளூர்- உமா மகேஸ்வரி

11.ராமநாதபுரம்- திசைவீரன்

12.நாகை- அஜிதா

அதுபோன்று ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவிகளுக்கான தேர்தலில் அதிமுக 150 இடங்களையும், திமுக 135 இடங்களையும் கைப்பற்றியுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.