பத்திரிகைகளின் பொய்யான செய்திகளுக்கு ஹரி மற்றும் வில்லியம் மறுப்பு!!

சகோதரர்களான தம்மைப் பற்றி பத்திரிகைகள் பொய்யான செய்திகளை வெளியிடுகின்றன என்று கேம்பிரிட்ஜ் இளவரசர் வில்லியம் மற்றும் சசெக்ஸ் இளவரசர் ஹரி ஆகியோர் தெரிவித்துள்ளனர்.


இளவரசர் வில்லியம் தம்மைப் புறந்தள்ளியதனால் ஏற்பட்ட கசப்பினாலேயே ஹரியும் மேகனும் தமது எதிர்காலம் குறித்த முடிவை எடுத்ததாக பெயரிடப்படாத ஒரு ஆதாரத்தை மேற்கோள் காட்டி ரைம்ஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டிருந்தது.

ஹரி மற்றும் மேகன் ஆகியோர் தமது எதிர்காலம் குறித்த முடிவை இன்ஸ்ரகிராம் மூலமாக கடந்த புதன்கிழமை தெரிவித்திருந்தனர். அதாவது அரச குடும்பத்தின் முன்னணி வகிபாகத்தில் இருந்து பின்வாங்க உள்ளதாகக் கூறினார்.

மேலும் இங்கிலாந்து மற்றும் வட அமெரிக்காவிற்கு இடையில் தங்கள் நேரத்தைப் பிரித்து வசிக்கவுள்ளதாகவும் அதேவேளை நிதிரீதியாக சுயாதீனமாக மாறவுள்ளதாகவும் குறிப்பிட்டனர்.

இவர்களது முடிவு குறித்து விவாதிக்க ராணி மற்றும் வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் சகோதரர்கள் வில்லியம் – ஹரி ஆகியோர் சந்திக்கவுள்ளனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.