சம்பந்தன் வெளியிட்ட வாழ்த்துச் செய்தி!

சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை காண பிரார்த்திக்கிறேன் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.


தைப்பொங்கல் வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ‘நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகளுக்கு, சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வைக் கண்டடைய இந் நந்நாளில் பிரார்த்திக்கிறேன்.

இலங்கை வாழ் அனைத்து தமிழ் மக்களுக்கும் எனது இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்.

மனித வாழ்வின் அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்கான இயற்கை வளங்களை அருளும் சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் இந்த உழவர் தின திருநாளில் இன்னல்கள் பலவற்றுக்கு முகங்கொடுத்துள்ள எமது மக்களின் வாழ்வில் இருள் நீங்கி வளமான எதிர்காலம் அமைய நான் பிரார்த்தனை செய்கிறேன்.

நீண்டகாலமாக தீர்வு காணப்படாத எமது மக்களின் அரசியல் அபிலாசைகள் சமத்துவமும் நீதியுமுள்ள ஒரு தீர்வை கண்டடைய இந்த நன்னாளில் இறைவனைப் பிரார்த்திப்போமாக’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.