ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பரிதாப பலி!

புத்தளம், வண்ணாத்திவில்லு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட இறால்மடு ஆற்றில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.


நேற்று (செவ்வாய்கிகழமை) மாலை 4.30 மணியளவில் இடம்பெற்றுள்ள இச்சம்பவத்தில் 36 வயதுடைய தாயும், அவரது 17 வயதுடைய மகனும், 19 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு நீரில் மூழ்கி உயிரிழந்தவர்கள் கண்டி அலவத்துகொடை பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்கள் ஒரு மாதத்திற்கு முன்னர் வண்ணாத்திவில்லு இறால்மடு பிரதேசத்தில் அமைந்துள்ள தனியாருக்குச் சொந்தமான காணி ஒன்றில் பணியாற்றுவதற்காக வந்திருந்தவர்கள் என்றும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதில் உயிரிழந்தவர்கள் வீரன் காயம்பு சந்திராகுமாரி (வயது 36), எஸ். சுபாசினி (வயது 19) மற்றும் கிருஸ்ண குமார் (வயது 17) என்றும் பொலிஸார் அடையாளம் கண்டுகொண்டுள்ளனர்.

நீரில் மூழ்கி உயிரிழந்தவர்களின் சடலங்கள் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக வண்ணாத்திவில்லு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.