யாழில் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல்!!

யாழ்ப்பாணம் மாநகர் கொட்டடியில் வாள்களுடன் வந்த கும்பல் ஒன்று இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தியுள்ளது.


தாக்குதலை அடுத்து பொதுமக்கள் துரத்திச் சென்ற போது 3 மோட்டார் சைக்கிள்களைக் கைவிட்டு கும்பல் தப்பிச் சென்றுள்ளது.

இந்தச் சம்பவம் கொட்டடி வைரவர் கோவிலடியில் இன்றிரவு 8 மணி அளவில் இடம்பெற்றது.

படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

3 மோட்டர் சைக்கிள்களில் வந்த ஏழுக்கு மேற்பட்டோர் அடங்கிய கும்பல் ஒன்றே இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளது. அவர்கள் பொம்மைவெளியைச் சேர்ந்தவர் என சந்தேகிக்கப்படுவதாக கொட்டடி இளைஞர்கள் தெரிவித்தனர்.

வன்முறைக் கும்பல் கைவிட்டுச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களும் கொட்டடியைச் சேர்ந்தவர்களால் சேதமாக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.