அவுஸ்ரேலியாவில் ஐந்து இலங்கையர்கள் கைது!

ஐந்து இலங்கையர்கள் உள்ளிட்ட ஏழு பேர் அவுஸ்ரேலியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.


திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரிலேயே விக்டோரியா பொலிஸாரினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மெல்போர்ன் நகரில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையின் போதே, இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்களில் மூன்று பெண்களும், நான்கு ஆண்களும் உள்ளடங்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த திருட்டுக் குழுவினர் அவுஸ்ரேலியாவின் பிரதான நகரங்களிலுள்ள ரயில் நிலையங்கள், அங்காடித்தொகுதி உள்ளிட்ட இடங்களில் குறித்த சந்தேக நபர்கள் திருட்டில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கைது செய்யப்பட்டுள்ள இலங்கையர்களுக்கு எதிராக பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் அவுஸ்ரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
#Tamilarul.net   #Tamil   #News   #Tamil News   #Tamil Daily News   #Website   #Tamil News Paper   #Tamil Nadu Newspaper  #Online   #Breaking   News Headlines    #Latest Tamil News   #India News    #World News   #Tamil Film   #Jaffna   #Kilinochchi  #Mannar  #Mullathivu  #Batticola  #Kandy  #Srilanka  #Colombo

கருத்துகள் இல்லை

Blogger இயக்குவது.